சூரியனால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்து, வெள்ளையான சருமத்தைப் பெற இத செய்யுங்க...

பலர் சருமத்திற்கு அன்றாடம் தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலர் அலுவலக வேலைப்பளுவால் நீண்ட நாட்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல் இருப்பார்கள். இப்படி நீண்ட நாட்கள் பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீக்கி, சருமம் வெள்ளையாகவும் மாறும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இறந்த செல்களைப் போக்கும் ஸ்கரப்!

 தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1 சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் தேன் - 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் ஒரு பௌலில் தேன், ஆரஞ்சு ஜூஸ், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் பாதி எலுமிச்சையை பிழிந்து கலந்து, பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி மென்மையாக 20 நிமிடம் ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

சரும கருமையைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்! 

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு - 1 டீஸ்பூன் ஷியா வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1

 ஒரு பௌலில் அரிசி மாவு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, ஷியா வெண்ணெய், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

 பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் அரிசி கழுவிய நீரால் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று வெள்ளையாக காட்சியளிக்கும்.

குறிப்பு 

இந்த முறையை வாரத்திற்கு 3 நாட்கள் என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதையும் நன்கு காணலாம்.





Comments