ஒரே வாரத்தில் சருமத்தில் இருக்கும் அசிங்கமான தழும்புகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

சிலருக்கு சருமத்தில் அசிங்கமான தோற்றத்தைத் தரும் வகையில் தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் அறுவை சிகிச்சையினால் வந்ததாகட்டும் அல்லது பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனையினால் வருவதாகட்டும், இவற்றைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தி எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா?

பணம் செலவழித்தது மட்டும் தான் மிச்சமா? கவலைப்படாதீர்கள். இப்படிப்பட்ட தழும்புகளை மறைக்க ஓர் நேச்சுரல் க்ரீம் உள்ளது. இந்த நேச்சுரல் க்ரீம்மை வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். சரி, இப்போது அந்த க்ரீம்மை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்: 

* பட்டை
 * தேன்

செய்முறை: 

முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1

 பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2 

1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தழும்புகள் மறையும் வரை தினமும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 

ஒருவேளை இந்த பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்துவதாக இருந்தால், 10 நிமிடத்தில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள். உடலின் வேறு பகுதி என்றால் மட்டுமே 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.







Comments